கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தில் பல ஆண்டுகளாக ஈரானுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த அமெரிக்கா, போர் வேண்டும் என்ற நோக்கத்தோடு காசிம் சுலைமானியை கொன்றுள்ளது எனச் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் கடும் கண்டனத்தைத் தெரிவித்த ஈரான், காசிம் படுகொலைக்கான உரியப் பதிலை அமெரிக்கா விரைவில் பெறும் என்றும் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கை, சுலைமானியின் இறுதி ஊர்வலம் நிறைவடைந்த சில மணி நேரத்தில் செயலாக வெளிப்பட்டது.
ஈரான் கிரீன் ஜோனில் 2 ராக்கெட் தாக்குதல் நேற்று இரவு நிகழ்த்தப்பட்டுள்ளது.